Monday, May 23, 2011

கடவுளை நொந்துக் கொள்வது ஏன்?


கடவுள் என்பவர் யார், அவரின் குணங்கள் யாது, என்று எதுவுமே தெரியாமல் அவரை நொந்துக் கொள்பவர்களை என்ன வென்று சொல்வது?

"இறைவன் தூணிலும் இருப்பான்...துறும்பிலும் இருப்பான்"!

இந்த அடைமொழியை என்றோ பதித்து சென்றவர்கள் நம் முன்னோர்கள். ஆனால் என்னை கேட்டால் இறைவன் எங்கும் ஒழிந்திருக்கவில்லை...அவர் நம்முள்ளே(நமக்குள்) மிக ஆழமாய்; அழுத்தமாய்; மிக ஆனந்தமாய், நம் மனம் எனும் கட்டாந்தரையில் என்றோ வந்து அமர்ந்துவிட்டார் அல்லது அமர்ந்திருக்கிறார் என்றே கூறுவேன்.

கடவுளானவர் அமைதியே சொரூபம் ஆனவர்; அன்பானவர்; யாருக்கும் எதற்காகவும் தீங்கு நினையாதவர்; நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் ஒவ்வொரு தவற்றையும் மன்னித்து ஏற்பவர்; அவரை உண்மை அன்போடு நேசித்து வருவோரின் ஊனிலே உறைந்து, ஒவ்வொன்றிக்கும் உறுதுணையாய் நிற்பவர்...! அவரே கடவுள்!

கடவுளை முழுமையாக உணராதவர்கள், அவரை நொந்துக் கொள்வதில் எந்த ஒரு பலனும் அல்லது பயனும் இல்லை என்பதை முதலில் உணர வேண்டும்! நாம் வணங்கும் கடவுளினால், நாம் படும் கஷ்டங்களைக் குறைக்க முடியுமே தவிர கஷ்டங்களே நடக்காமல் செய்து விட முடியாது. நாம் என்றோ (முற்பிறவியின் தாக்கங்களாக இருக்கலாம் அல்லது இப்பிறவியில் புரிந்த முன்வினைக் காரணங்களாக கூட இருக்கலாம்) செய்த கருமங்களின் பலன்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதே உலகின் நியதி. சித்தர்களும் இதற்கு விதி விளக்கல்ல.

நம்மில் பலர் நன்றாய் வாழும் போது, கடவுளை நினைத்துப் பார்ப்பதே இல்லை; காலையும் மாலையும் கடவுளின் முன் நின்று, ஒரு 'சல்யூட்' (salute) அடிப்பதையே ஒரு தொழிலாய் கொண்டிருக்கின்றனர். துன்பம் வந்த பிறகே கடவுளை தேடுவது இன்று வாடிக்கையாய் போய்விட்டது. பல மடங்கான துன்பங்களை அனுபவித்த போதினும், இறைவனின் கால்களை இருக்கமாய் பிடித்துக் கொண்டு கரை சேர்ந்தவர்கள், கணக்கில் அடங்கா! இறைவனை நொந்து திரிந்தவர்கள் வாழ்க்கையெனும் கடலில் கரை சேர்ந்ததாய் சரித்திரம் இல்லை.

உலகில் துன்பத்தை பற்றி அறியாதவர்கள் யாரேனும் உண்டா?

ஆகவே, முதல் வேலையாக உங்களை நீங்களே நேசிக்க தொடங்குங்கள்!

ஓவ்வொரு நாளும் கடவுளை நினைத்து வழி படுங்கள்; ஒரு நாளில் இரு வேளையும் குறைந்தது 15 அல்லது 30 நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள்!

காலையில் கடவுளை நினைத்து விழி தளர்த்துங்கள்...அழகான விடியலை கொடுத்ததிற்கு!

இறவில் அவரை நினைத்து விழி சாயுங்கள்...நிம்மதியான தூக்கம் மற்றும் வாழ்க்கை தந்ததிற்கு!

எத்தனையோ கோடான கோடி ஜனங்கள் உண்ண உணவில்லாமல் வாழ்வதை நினைத்துப் பார்த்து, சோற்றின் முதல் பருக்கை நாவில் வைப்பதற்கு முன், கடவுளுக்கு மனதார நன்றி சொல்லுங்கள்!

அவர் எங்கும் இல்லை...உங்களில் ஒருவராய் எங்கும் சூழ்ந்திருக்கிறார்.


அன்புடன்,

தமிழருவி

Wednesday, March 9, 2011

நிம்மதி

சில நேரங்களில் என்னையும் மீறி, கறுப்பு காலங்களின் நினைவலைகள் தாக்கம் தொடர்கிறது என்னுள்!
"கடவுளே, என்னைக் காப்பாற்றுங்கள்" - என
கெஞ்சி குழையும் நெஞ்சம் - அதன்
வழி தாங்காமல் கன்னத்தை குளமாக்கும்,
கண்ணீர் துளிகள்!

இருந்தும் ஏதோ ஒன்று, என் மனதின் வழி கோர்த்து,
என்னை இருக்கி அணைத்து, அதன் தோள் சாய்க்கிறது...
இதமாய் தலைச்சாய்ந்துக் கொள்ள, லேசாய் ஆகிறது மனதின் பாரம்!

உடல் சிலிர்த்து போக, கண்களை மூடிக்கொள்கிறேன்...
என் மெய் அறியாமல் முணு முணுக்கின்றன இதழ்கள்...

நெஞ்சாற நினைப்பவர்க்கு நிழல்போல் இருப்பவரே...
ஒவ்வொரு வினாடியும் உங்களின் நீங்காத நினைவோடு
இருக்குமென் குலம் தழைக்க செல்வமாவோரே!
உங்களின் புகழ் பாடுகின்ற எனக்கு கொடுமையான சாபமில்லை;
ஒரு வினையும் வர போவதில்லை!
வேல்போல் துணையிருந்து, அஞ்சாதீர் என கூறி,
எம்பெருமான் நீங்களே என்னின் துணையாய்யிருக்க - எனக்கு
வெற்றியே உண்டாகும்...
யுகம் யுகமாய் தோன்றும் அருட் குருவே...
உங்களை என்றும் அகத்துள் வைத்திருக்கிறேன்...
என்னை காத்து அருள்வீராக!

ஓம் ஸ்ரீ குரு அகத்தீஸ்வராய நமஹ!

யாரோ அழைக்கும் குரல் கேட்டு
திடுக்கிட்டு விழிக்கிறேன்...
"சீக்கிரம் வாங்க, நேரம் ஆச்சு!", என உறவொன்று அழைக்க, 
பூஜை அறையிலிருந்து கால்கள் விரைந்து செயல்படத்தொடங்குகின்றன!

இருந்தும்...
எதையோ விட்டு செல்வதாய் நினைத்து,

அங்கேயே நிலைக்குத்தி நிற்கிறது மனசு!




Friday, February 18, 2011

வெங்காயம்




வெங்காயம் இரத்த விருத்திக்கும் இரத்த சுத்திக்கும் நல்ல வகையில் பயன்பட கூடியதாகும். இரத்த விருத்திக்காக என்று புட்டி புட்டியாக டானிக்குகளை சாப்பிடுவோர் ஒரு நாளைக்கு ஒரு வெங்காயத்தை பட்சையாக சாப்பிட்டு வந்தால் போதும். மிகவும் குறைந்த செலவிலேயே அது நல்லதொரு இரத்த விருத்தி டானிக்காக பயன்படும்.

தொடர்ந்து புகைக்கும் காரணத்தால் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தால், வெங்காயத்தின் சாறு எடுத்து வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் ஒரு நாளைக்கு நான்கு வேளை கொடுத்து வந்தால் நல்ல குணம் தெரியும். மற்றும் இருமல், கப வாந்தி, இரத்த வாந்தி, நாட்பட்ட சளி போன்றவற்றையும் வெங்காயச் சாறு குணமாக்கும்.

வெங்காயச் சாற்றுடன் கடுகெண்ணை கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுகளில் வலி தோன்றும் போது உபயோகிக்கலாம். நல்ல குணம் தெரியும். திடீரென்று மயக்கமடைந்து விழுந்து விட்டவர்களின் மூக்கில் இரண்டொரு துளி வெங்காயச் சாறு விட மயக்கம் தெளிந்து உட்காருவார்கள்.

அரைக்கீரை

 

சிறுநீர் இறங்குவதில் சிரமம் இருந்தால், அரைக்கீரை நிவர்த்தி செய்யும். இந்த கீரையை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, பித்தம் தொடர்பான எல்லாப் பிணிகளும் விலகி, நல்ல குணம் தெரியும்.

இஞ்சி


வாய்வையும் கபத்தையும் கண்டிக்கும் ஆற்றல் பெற்றது. தொண்டைப் புண், குரல் கம்மல், பித்தம், மயக்கம், நீரிழிவு, வயிற்றுப் பொருமல், வயிற்று வலி போன்ற பிணிகளுக்கு, இஞ்சிச் சாறு மிகவும் நல்ல மருந்து.

பொதுவாக இஞ்சியைக் கசாயம் செய்து சாப்பிடலாம், உணவோடு அன்றாடம் சேர்த்து கொள்வது உத்தமம். அதிகாலை நேரத்தில் இஞ்சிச் சாறுடன் சர்க்கரைச் சேர்த்து சாப்பிட பித்த மயக்கம், கிறுகிறுப்பு அகலும். இஞ்சிச் சாறும் தேனும் கூட்டி அதிகாலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதய நோய்கள் அகலும், இதயம் வலிமை பெறும்.


Thursday, February 17, 2011

ஞானச்சுடர்


நாம் விரும்பியோ, விரும்பாமலோ, இந்த பூமியில் பிறப்பெடுத்து விட்டோம். யாராக இருந்தாலும் என்றாவது ஒரு நாள், இந்த உலகை விட்டு போய்தான் தீர வேண்டும். அதுவரை இந்த பிறவியால் எவ்வளவோ அழுக்கை நம் மனதில் எற்றுக் கொண்டு விடுகிறோம்.

மனம், வாக்கு, உடம்பு, ஆகிய வற்றால் எவ்வளவோ பாவங்களை செய்து விட்டோம். அதே உடலைக் கொண்டுதான், பாவங்களுக்குப் பிராயச்சித்தமும் தேட வேண்டும்.

சாஸ்திர நூல்கள், திருத்தலங்கள், தீர்த்தவாதிகள் முதலிய நல்ல விஷயங்களில் நம் மனம் ஈடுபட வேண்டும். நிறைய புண்ணிய காரியங்களைச் செய்து, பாவங்களைக் கரைத்துவிட வேண்டும்.

நம் மனதில் எப்போது ஒழுக்கமும் தூய்மையும் கட்டுப்பாடும் உண்டாகிறதோ, அப்போதுதான் உண்மையான பக்தியும் ஞானமும் உண்டாகும். அதுவரை நாம் செய்யும் பூஜை, வழிப்பாடு எல்லாம் இரண்டாம் பட்சம்தான்!

வளரும் பயிர்களுக்கு வேலிபோட்டால்தான், ஆடு, மாடு போன்ற உயிரினங்களினால் பாதிக்கப்படாமல் வளர்ந்து நிற்கும். அதுபோல நாம் சம்பாதிக்கும் பணத்திற்கு வேலி இருக்கிறது, அதுதான் தான தர்மம். இதை செய்யும் போதுதான் பாவங்கள் நீங்கும்.

சந்தனம் என்பது குளிர்ச்சியையும் வாசனையையும் தருவதைப் போல சத்தியத்தை அறிவதற்காகக் கொடுக்கப்பட்ட உடல் இது. அதை அற்பச் செயல்களுக்குப் பயன் படுத்தக் கூடாது.


அபிராமி அந்தாதி

அகால மரணத்தைத் தவிர்க்க

ஆளுகைக்(கு) உன்றன் அடித்தா
மரைகள் உண்(டு). அந்தகன்பால்
மீளுகைக்(கு) உன்றன் விழியின்
கிடையுண்டு; மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை; நிங்குறை
யே அன்று; முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்தவில்
லான்பங்கில் வாணுதலே - 0039




















 
அபிராமி! நின் திருவடித் தாமரைகள் இருக்கின்றன. அவற்றிற்கு என்னை ஆளும் அருள் உண்டு. உன்னுடைய கடைக்கண் கருணை உண்டு. ஆகையால் எமனிடத்திலிருந்து எனக்கு மீட்சியுண்டு. நான் உன்னை முயன்று வணங்கினால் பயன் உண்டு. வணங்காவிடின் அது என் குறையே, உன் குறையன்று. அழகிய நெற்றியை உடையவளே! முப்புரத்தை அழிக்க வில்லையும் அம்பையும் எடுத்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! அபிராமியே!

Saturday, February 12, 2011

இம்மாத ஞானமொழி

மாதம்: பிப்ரவரி, 2011

"கற்றது கையளவு, கல்லாதது கடலளவு" என்பது ஔவையின் அருள்மொழி. எவ்வளவுதான் கல்வி கற்று பட்டம் பெற்றிருந்தாலும், ஞானக்கல்வியே முழுமைக் கல்வி. இக்கல்வியே மனிதனாக வாழ வழிக்காட்டுகிறது.

குருவை வணங்கும் கல்வியைக் கற்றுக்கொள்; குணமுள்ள மனிதனாக திகழ்வாய். தர்ம கல்வியைக் கற்றுக்கொள்; உள்ளத்தில் அன்பு பெருகி தர்ம சிந்தனை உடையவனாக போற்றப்படுவாய். அன்பு கல்வியைக் கற்றுக்கொள்; எல்லோருடைய மனதிலும் நீ வாழ்வாய். ஒழுக்கக் கல்வியை கற்றுக்கொள்; வானோர்க்கு நிகராக புகழப்படுவாய்.

சத்தியக் கல்வியை கற்றுக்கொள்; நீதி தவறாத மனிதனாக பூலோகத்தில் உலா வருவாய். அடக்கக் கல்வியைக் கற்றுக்கொள்; அமைதி நிறைந்தவனைக் காண்பாய். புண்ணியக் கல்வியைக் கற்றுக்கொள்; புனிதனாக இறையருள் பெற்றுக் காணப்படுவாய்.

மேற்கண்ட கல்விகள் யாவும் நமக்காக மகான்கள் விட்டுச் சென்ற அரிய பொக்கிஷங்கள் ஆகும். ஆக இத்தகைய கல்வியை ஒவ்வொரு மாந்தரும் தவறாது கற்று, பிறவி துன்பத்திலிருந்து விடை பெறுவோம். ஞானக் கல்வியின் மகத்துவத்தை உணர்ந்து நாம் எல்லோரும் செயல் படுவோம்.

"எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன், கற்று விட்டேன் என்று ஏமாந்து விடாதே! நீ படிக்க வேண்டியதும், கற்க வேண்டியதும் இன்னும் கடல் போல் இருக்கின்றது என்பதை மறந்து விடாதே மனமே!".

Monday, February 7, 2011

இம்மாத ஞானமொழி

மாதம்: ஜனவரி, 2011

நல் மனிதர்களாக வாழ்வதற்கு, நல் எண்ணங்கள் கொண்டிருத்தல் அவசியம். நல் எண்ணம் கொண்டிராத மனிதன், பிறரின் அன்பை பெற முடியாது. பிறரால் எப்போதும் தூற்றப்படுவான், தனித்தே இயங்குவான். இவனால் அவனுக்கோ, சமுதாயத்திற்கோ எந்த பயனும் இல.


  • மனிதர்களை நேசியுங்கள், அவர்களுக்கு முடிந்த தொண்டுகளைச் செய்யுங்கள், ஆனால் யாருடைய பாராட்டுக்கும் ஆசைப்படாமல் இருங்கள்.
  • கடவுளின் படைப்பில் அற்பமானவர்கள் என்று யாருமில்லை. ஆகவே யாரையும் ஏளனம் செய்யாதீர்கள், அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள்.
  • உங்களது எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றினாலும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சி அனுபவங்களை வழங்குங்கள், அதுவே உங்களுக்குள் இருக்கும் கடவுளுக்கு அளிக்கும் காணிக்கை போன்றதாகும்.
  • வெறுமனே யாருக்கும் பயனில்லாமல் வாழ்வதைவிட, நல்ல லட்சியங்களை உருவாக்கிக் கொண்டு, அதை நோக்கிப் பயனிப்பதில்தான் வாழ்வின் அர்த்தம் அடங்கியுள்ளது.
  • மீண்டும் மனித பிறவி நமக்கு கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். அதனால், கிடைத்த பிறவியை பயனுடையதாக்கிக் கொள்வது நமது கடமை.
  • மனித மனம் லாவகமாகக் கையாளப்பட வேண்டிய ஒரு கருவி. சரியான எண்ணங்களை அதில் புகுத்தினால்தான், அதனை முறையாக இயக்க முடியும்.
  • இன்று நம்மில் பெரும்பாலோர், வாழ்வில் விலக்க வேண்டிய விஷயங்களை திரும்ப திரும்ப சிந்திக்கிறார்கள், இது தவறு என்பது புரியாமலிக்கிறார்கள்.
  • வாழ்க்கையோடு நாம்தான் விளையாட வேண்டுமே தவிர, வாழ்க்கை நம்மோடு விளையாட அனுமதிக்கக் கூடாது. முறையான பயிற்சியும் முயற்சியும் இருந்தால் இது சாத்தியம்.
  • மேற்கண்ட ஆன்றோர்களின் அருளுரைகளை, நாம் மனதில் எப்போதும் சுமந்து கொண்டால், நமது வாழ்வில் பல துன்பங்களை வெல்லலாம்.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * ** *
Translation

Good thinking is a must if one wants to ‘LIVE’ life to the fullest. And one can’t except love from others in the absence of good thoughts. Moreover, such a person is of no use to themselves and to society. Therefore: 
  • Be nice to people; do what you can without expecting to gain.
  • Don’t disregard or be offensive to anyone; love all.
  • Your thought s, deeds and sayings must make others happy that will be your gift to GOD.
  • Rather than be of no use to anyone; living a life of worthy values and virtues that will give meaning to your very existence.
  • We may reincarnate, or not at all. However, be duty-bound to benefit from your current existence and live life as you should.
  • Fill your mind with the right thoughts and that will help us direct it as we want.
  • Many of us continue to dwell on issues that must be forgotten; let us avoid that hereafter.
  • We must manage life and not the other way around. That is possible if we are on the right track.
Keep the above close to your heart and live them. Observe as all your troubles melt away, and savor victory over them. 


Friday, January 21, 2011

அகத்தியர் உருவம்

இத்தகைய உயர்ந்த மார்க்கங்களைச் சொன்ன சித்தர் அகத்தியர் புராணங்களில் மற்றும் செவிவிழி கதைகளில் வர்ணிக்கப்படும்போது அவர் உருவம் நகைப்பிற்குரியதாய் உள்ளது. அகத்தியர் கட்டைவிரல் உயரம் உள்ளவர்; முழங்கால் உயரம் உள்ளவர் என்றும் தொப்பை வயிறாகவும் பருத்த உடம்பாகவும் குள்ளமான தோற்றம் உடையவர் என்றும் சித்தரிக்கப்படுகிறார். புராணங்களிலும் சினிமாவிலும் இப்படிக்காட்டப்படுவதால் இதை உண்மையென்றே மக்களும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். சித்தர்கள் காலம் கடந்தவர்கள்; வயது நிர்ணயிக்க முடியாதவர்கள்.

"கற்பமுறை கொண்டல்லோ யுகாந்த காலம்
காசினியில் இருப்பவனே சித்தனாமே"

அகத்தியர் பெருநூல் காவியம் (21000-இல்) "கற்பங்கள் சாப்பிட்டு யுகாந்த காலம் உலகில் என்றும் அழியாது இருப்பவனே சித்தன்" என்று கூறுகிறார். தூலமான உடல் கொண்டவர் சித்தராகார். அதாவது உடல் பெருத்தவர்கள் சித்தராக மாட்டார்கள். கற்ப சாதனைகளால் உடலை சித்தி செய்து மரணமில்லாமல் பல யுகங்கள் வாழ்பவரே சித்தர்.

"வாழ்கிறோம் சித்தரோடு ரிஷிகளெல்லாம்
மகத்தான கற்பூரதீபம் போலே
வாழ்கிறோம் காயத்தை ஒளிபோலாக்கி
அப்பனே கருவிடையம் சொல்லக்கேளு"

"சித்தர்கள், ரிஷிகள் எல்லாம் காயத்தை (உடம்பை) கற்பூரதீபம் போன்று ஒளி உடம்பாக்கி வாழ்கிறோம்"என்று அருள்மிகு கொங்கணவர் தன் கடைக்காண்டம் 500-இல் சொல்கிறார்.

"தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே
தேஜொளிவின் மயங்கொண்ட கும்ப யோனி
பானான பராபரத்துக்கு ஒப்பிதனை
பாருலகில் அகத்தியரை பகருவேனே"
                                                                                     - போகர் 7000

"அகத்தியரின் தேக ஒளி விண்நிறைந்த ஒளிப் பிழம்புக்கு நிகரானது" என்று போகர் கூறுகிறார். அகத்தியரின் சொரூபம் தேஜசுடன் கூடிய ஒளி நிறைந்தது என்று சொல்கிறார்.

"காயமதை அழியாமற் செய்வதற்குக்
கருத்தான சிவபோகங்கண்டு தேறு
மாயமுள்ள வாழ்வுதனை மறந்துப்போடு
மைந்தனே ஞானமதின் வழியில் நில்லே"
                                                                                     - அ.மி. சுகப்பிரம்ம ரிஷி

"காயத்தை அழியாமல் செய்வதற்குச் சிவயோகம் பயில வேண்டும்; அதற்கு ஞானவழியில் செல்ல வேண்டும்" என்று அருள்மிக சுகபிரம்மர் கூறுகிறார். சித்தரென்றால் காயத்தைச் சித்திபண்ணி ஒளி உடம்பாக்கி வெளியில் கலப்பர் என்பதாம்.

"ஏறாதுவாசி வலுவில்லாக் காயம்
என்னசெய்யு மண்பாண்டம் ஏதுக்காகும்
தேறாது உடல் வழுத்துப் பிராணம் குன்றில்
தெய்வஒளி காணரிது தேசட்தோர்க்கு"
                                                                                      - அ.மி. காசுபுசுண்டர்

Sunday, January 9, 2011

தமிழ்மொழிக்கு முதல் இலக்கணம் வகுத்தவர் அகத்தியர்!



தமிழ்மொழிக்கு முதல் இலக்கணம் வகுத்தவர் அகத்தியர் மாமுனிவரே! அவர் முத்தமிழ் சங்கத்தில் தலைமை பொறுப்பில் இருந்தார் என்பதும் தொல்காப்பியம் முன் அறியமுடிகிறது. அவர் இயக்கிய இலக்கண நூல அகத்தியம். தொல்காப்பியம் இயற்றிய தொல்காப்பியரும் அகத்தியர் மாரபில் வந்த சீடர்களில் ஒருவர் என்றும் தெரிகிறது. தமிழாய்ந்த புலவர்களால் வழி நடத்தப்பட்ட தமிழ்ச்சங்கத்தில் தலைமை வகித்த அகத்தியரும் சித்தராகவும், முனிவராகவும் போற்றப்படுகிற அகத்தியரும் ஒருவர்தான் என்பதை அவர் வழங்கிய பஞ்சகாவிய நிகண்டில் தெளிவுபட உறைக்கிறார்.

"வண்ணச் செந்தமிழ்ப் புலவோர் அகத்தியன் வாக்கிய
மாமுனிவோன் சொன்னமொழி மறைப்பிராது
எண்ணத்தால் தமிழ்ச்சிந்தாமணி இந்நூல்தான்
எல்லவரும் அறிந்திடினும் அறிவுள்ளாரே"

"புலவர் அகத்தியரே மாமுனிவரும் ஆவார். அவர் இயற்றிய செந்தமிழ் சிந்தாமணி ஆகிய நூல் எந்த மறைப்பும் இல்லாதது. எவர் படித்தாலும் அறிவுடையவர் ஆவர்" என்றும் கூறுவதில் இருந்து அகத்தியர் என்று பலர் இருக்கவில்லை. தமிழ்ச்சங்கத்தில் தலைமைவகித்த புலவர் அகத்தியரும் சித்தவர்கத்தில் முதன்மையானவர் என போற்றப்படுகிற அகத்தியரும் ஒருவர்தான் என்று மேற்கண்ட பாடல்களால் உருதிப்படுத்தப்படுகின்றது. அகத்தியர் ஒருவரே! அவர் புலவராகவும், சித்தராகவும், மாமுனிவராகவும் போற்றப்படுகின்றார். மக்கள் நல்வாழ்விற்காக வைத்தியம், சோதிடம், ஜாலம், யோகம், ஞானம் எனப் பல துறைகள் பற்றி பாடியுள்ளார். இலட்சக்கணக்கில் நூல்களாக்கிக் கொடுத்துள்ளார். குரு சீடர் பரம்பரை சித்தர் பரம்பரை. அதை உருவாக்கி, குருகுலம் அமைத்துத் தம்மை நாடி வருபவர்களுக்கு மேற்கண்ட கலைகளைப் போதித்து மனிதன் மனிதனாக வாழ்ந்து மரணமிலா பெரு வாழ்வு சாகக்கலையையும் கற்றுக் கொடுத்து உயர்த்தியுள்ளார். சித்த நெறியில் ஒழுகுவோர் பஞ்சமா பாதகங்கள் தவிர்த்து தாமரையிலை தண்ணீர் போல் உலகை விட்டு விலகாமல் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்து வாழ நெறிகள் போதித்துள்ளார். யோகிகள் என்று வேடம் புனைந்து யாசித்து வாழ்வது சித்தர் நெறி ஆகாது. இதை அகத்தியர் வன்மையாகக் கண்டிக்கிறார். அதனாள் சித்தர்நெறி ஒழுகுவோர் பிழைக்கவும் பல கலைகள் கற்பித்தார். அதில் இரசவாதமும் ஒன்று. மட்டமான ஒரு உலோகத்தை முப்பு போன்ற மருந்துகளைக் கொண்டு தங்கமாக்கி விற்று உண்பதற்கு வழி சொல்லி உள்ளார்.