Friday, February 18, 2011

இஞ்சி


வாய்வையும் கபத்தையும் கண்டிக்கும் ஆற்றல் பெற்றது. தொண்டைப் புண், குரல் கம்மல், பித்தம், மயக்கம், நீரிழிவு, வயிற்றுப் பொருமல், வயிற்று வலி போன்ற பிணிகளுக்கு, இஞ்சிச் சாறு மிகவும் நல்ல மருந்து.

பொதுவாக இஞ்சியைக் கசாயம் செய்து சாப்பிடலாம், உணவோடு அன்றாடம் சேர்த்து கொள்வது உத்தமம். அதிகாலை நேரத்தில் இஞ்சிச் சாறுடன் சர்க்கரைச் சேர்த்து சாப்பிட பித்த மயக்கம், கிறுகிறுப்பு அகலும். இஞ்சிச் சாறும் தேனும் கூட்டி அதிகாலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதய நோய்கள் அகலும், இதயம் வலிமை பெறும்.


No comments:

Post a Comment