தமிழ்மொழிக்கு முதல் இலக்கணம் வகுத்தவர் அகத்தியர் மாமுனிவரே! அவர் முத்தமிழ் சங்கத்தில் தலைமை பொறுப்பில் இருந்தார் என்பதும் தொல்காப்பியம் முன் அறியமுடிகிறது. அவர் இயக்கிய இலக்கண நூல அகத்தியம். தொல்காப்பியம் இயற்றிய தொல்காப்பியரும் அகத்தியர் மாரபில் வந்த சீடர்களில் ஒருவர் என்றும் தெரிகிறது. தமிழாய்ந்த புலவர்களால் வழி நடத்தப்பட்ட தமிழ்ச்சங்கத்தில் தலைமை வகித்த அகத்தியரும் சித்தராகவும், முனிவராகவும் போற்றப்படுகிற அகத்தியரும் ஒருவர்தான் என்பதை அவர் வழங்கிய பஞ்சகாவிய நிகண்டில் தெளிவுபட உறைக்கிறார்.
"வண்ணச் செந்தமிழ்ப் புலவோர் அகத்தியன் வாக்கிய
மாமுனிவோன் சொன்னமொழி மறைப்பிராது
எண்ணத்தால் தமிழ்ச்சிந்தாமணி இந்நூல்தான்
எல்லவரும் அறிந்திடினும் அறிவுள்ளாரே"
"புலவர் அகத்தியரே மாமுனிவரும் ஆவார். அவர் இயற்றிய செந்தமிழ் சிந்தாமணி ஆகிய நூல் எந்த மறைப்பும் இல்லாதது. எவர் படித்தாலும் அறிவுடையவர் ஆவர்" என்றும் கூறுவதில் இருந்து அகத்தியர் என்று பலர் இருக்கவில்லை. தமிழ்ச்சங்கத்தில் தலைமைவகித்த புலவர் அகத்தியரும் சித்தவர்கத்தில் முதன்மையானவர் என போற்றப்படுகிற அகத்தியரும் ஒருவர்தான் என்று மேற்கண்ட பாடல்களால் உருதிப்படுத்தப்படுகின்றது. அகத்தியர் ஒருவரே! அவர் புலவராகவும், சித்தராகவும், மாமுனிவராகவும் போற்றப்படுகின்றார். மக்கள் நல்வாழ்விற்காக வைத்தியம், சோதிடம், ஜாலம், யோகம், ஞானம் எனப் பல துறைகள் பற்றி பாடியுள்ளார். இலட்சக்கணக்கில் நூல்களாக்கிக் கொடுத்துள்ளார். குரு சீடர் பரம்பரை சித்தர் பரம்பரை. அதை உருவாக்கி, குருகுலம் அமைத்துத் தம்மை நாடி வருபவர்களுக்கு மேற்கண்ட கலைகளைப் போதித்து மனிதன் மனிதனாக வாழ்ந்து மரணமிலா பெரு வாழ்வு சாகக்கலையையும் கற்றுக் கொடுத்து உயர்த்தியுள்ளார். சித்த நெறியில் ஒழுகுவோர் பஞ்சமா பாதகங்கள் தவிர்த்து தாமரையிலை தண்ணீர் போல் உலகை விட்டு விலகாமல் ஒட்டியும் ஒட்டாமலும் இருந்து வாழ நெறிகள் போதித்துள்ளார். யோகிகள் என்று வேடம் புனைந்து யாசித்து வாழ்வது சித்தர் நெறி ஆகாது. இதை அகத்தியர் வன்மையாகக் கண்டிக்கிறார். அதனாள் சித்தர்நெறி ஒழுகுவோர் பிழைக்கவும் பல கலைகள் கற்பித்தார். அதில் இரசவாதமும் ஒன்று. மட்டமான ஒரு உலோகத்தை முப்பு போன்ற மருந்துகளைக் கொண்டு தங்கமாக்கி விற்று உண்பதற்கு வழி சொல்லி உள்ளார்.
No comments:
Post a Comment