Thursday, February 17, 2011

அபிராமி அந்தாதி

அகால மரணத்தைத் தவிர்க்க

ஆளுகைக்(கு) உன்றன் அடித்தா
மரைகள் உண்(டு). அந்தகன்பால்
மீளுகைக்(கு) உன்றன் விழியின்
கிடையுண்டு; மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை; நிங்குறை
யே அன்று; முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்தவில்
லான்பங்கில் வாணுதலே - 0039




















 
அபிராமி! நின் திருவடித் தாமரைகள் இருக்கின்றன. அவற்றிற்கு என்னை ஆளும் அருள் உண்டு. உன்னுடைய கடைக்கண் கருணை உண்டு. ஆகையால் எமனிடத்திலிருந்து எனக்கு மீட்சியுண்டு. நான் உன்னை முயன்று வணங்கினால் பயன் உண்டு. வணங்காவிடின் அது என் குறையே, உன் குறையன்று. அழகிய நெற்றியை உடையவளே! முப்புரத்தை அழிக்க வில்லையும் அம்பையும் எடுத்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! அபிராமியே!

No comments:

Post a Comment