Monday, May 23, 2011

கடவுளை நொந்துக் கொள்வது ஏன்?


கடவுள் என்பவர் யார், அவரின் குணங்கள் யாது, என்று எதுவுமே தெரியாமல் அவரை நொந்துக் கொள்பவர்களை என்ன வென்று சொல்வது?

"இறைவன் தூணிலும் இருப்பான்...துறும்பிலும் இருப்பான்"!

இந்த அடைமொழியை என்றோ பதித்து சென்றவர்கள் நம் முன்னோர்கள். ஆனால் என்னை கேட்டால் இறைவன் எங்கும் ஒழிந்திருக்கவில்லை...அவர் நம்முள்ளே(நமக்குள்) மிக ஆழமாய்; அழுத்தமாய்; மிக ஆனந்தமாய், நம் மனம் எனும் கட்டாந்தரையில் என்றோ வந்து அமர்ந்துவிட்டார் அல்லது அமர்ந்திருக்கிறார் என்றே கூறுவேன்.

கடவுளானவர் அமைதியே சொரூபம் ஆனவர்; அன்பானவர்; யாருக்கும் எதற்காகவும் தீங்கு நினையாதவர்; நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் ஒவ்வொரு தவற்றையும் மன்னித்து ஏற்பவர்; அவரை உண்மை அன்போடு நேசித்து வருவோரின் ஊனிலே உறைந்து, ஒவ்வொன்றிக்கும் உறுதுணையாய் நிற்பவர்...! அவரே கடவுள்!

கடவுளை முழுமையாக உணராதவர்கள், அவரை நொந்துக் கொள்வதில் எந்த ஒரு பலனும் அல்லது பயனும் இல்லை என்பதை முதலில் உணர வேண்டும்! நாம் வணங்கும் கடவுளினால், நாம் படும் கஷ்டங்களைக் குறைக்க முடியுமே தவிர கஷ்டங்களே நடக்காமல் செய்து விட முடியாது. நாம் என்றோ (முற்பிறவியின் தாக்கங்களாக இருக்கலாம் அல்லது இப்பிறவியில் புரிந்த முன்வினைக் காரணங்களாக கூட இருக்கலாம்) செய்த கருமங்களின் பலன்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதே உலகின் நியதி. சித்தர்களும் இதற்கு விதி விளக்கல்ல.

நம்மில் பலர் நன்றாய் வாழும் போது, கடவுளை நினைத்துப் பார்ப்பதே இல்லை; காலையும் மாலையும் கடவுளின் முன் நின்று, ஒரு 'சல்யூட்' (salute) அடிப்பதையே ஒரு தொழிலாய் கொண்டிருக்கின்றனர். துன்பம் வந்த பிறகே கடவுளை தேடுவது இன்று வாடிக்கையாய் போய்விட்டது. பல மடங்கான துன்பங்களை அனுபவித்த போதினும், இறைவனின் கால்களை இருக்கமாய் பிடித்துக் கொண்டு கரை சேர்ந்தவர்கள், கணக்கில் அடங்கா! இறைவனை நொந்து திரிந்தவர்கள் வாழ்க்கையெனும் கடலில் கரை சேர்ந்ததாய் சரித்திரம் இல்லை.

உலகில் துன்பத்தை பற்றி அறியாதவர்கள் யாரேனும் உண்டா?

ஆகவே, முதல் வேலையாக உங்களை நீங்களே நேசிக்க தொடங்குங்கள்!

ஓவ்வொரு நாளும் கடவுளை நினைத்து வழி படுங்கள்; ஒரு நாளில் இரு வேளையும் குறைந்தது 15 அல்லது 30 நிமிடங்களாவது தியானம் செய்யுங்கள்!

காலையில் கடவுளை நினைத்து விழி தளர்த்துங்கள்...அழகான விடியலை கொடுத்ததிற்கு!

இறவில் அவரை நினைத்து விழி சாயுங்கள்...நிம்மதியான தூக்கம் மற்றும் வாழ்க்கை தந்ததிற்கு!

எத்தனையோ கோடான கோடி ஜனங்கள் உண்ண உணவில்லாமல் வாழ்வதை நினைத்துப் பார்த்து, சோற்றின் முதல் பருக்கை நாவில் வைப்பதற்கு முன், கடவுளுக்கு மனதார நன்றி சொல்லுங்கள்!

அவர் எங்கும் இல்லை...உங்களில் ஒருவராய் எங்கும் சூழ்ந்திருக்கிறார்.


அன்புடன்,

தமிழருவி

Wednesday, March 9, 2011

நிம்மதி

சில நேரங்களில் என்னையும் மீறி, கறுப்பு காலங்களின் நினைவலைகள் தாக்கம் தொடர்கிறது என்னுள்!
"கடவுளே, என்னைக் காப்பாற்றுங்கள்" - என
கெஞ்சி குழையும் நெஞ்சம் - அதன்
வழி தாங்காமல் கன்னத்தை குளமாக்கும்,
கண்ணீர் துளிகள்!

இருந்தும் ஏதோ ஒன்று, என் மனதின் வழி கோர்த்து,
என்னை இருக்கி அணைத்து, அதன் தோள் சாய்க்கிறது...
இதமாய் தலைச்சாய்ந்துக் கொள்ள, லேசாய் ஆகிறது மனதின் பாரம்!

உடல் சிலிர்த்து போக, கண்களை மூடிக்கொள்கிறேன்...
என் மெய் அறியாமல் முணு முணுக்கின்றன இதழ்கள்...

நெஞ்சாற நினைப்பவர்க்கு நிழல்போல் இருப்பவரே...
ஒவ்வொரு வினாடியும் உங்களின் நீங்காத நினைவோடு
இருக்குமென் குலம் தழைக்க செல்வமாவோரே!
உங்களின் புகழ் பாடுகின்ற எனக்கு கொடுமையான சாபமில்லை;
ஒரு வினையும் வர போவதில்லை!
வேல்போல் துணையிருந்து, அஞ்சாதீர் என கூறி,
எம்பெருமான் நீங்களே என்னின் துணையாய்யிருக்க - எனக்கு
வெற்றியே உண்டாகும்...
யுகம் யுகமாய் தோன்றும் அருட் குருவே...
உங்களை என்றும் அகத்துள் வைத்திருக்கிறேன்...
என்னை காத்து அருள்வீராக!

ஓம் ஸ்ரீ குரு அகத்தீஸ்வராய நமஹ!

யாரோ அழைக்கும் குரல் கேட்டு
திடுக்கிட்டு விழிக்கிறேன்...
"சீக்கிரம் வாங்க, நேரம் ஆச்சு!", என உறவொன்று அழைக்க, 
பூஜை அறையிலிருந்து கால்கள் விரைந்து செயல்படத்தொடங்குகின்றன!

இருந்தும்...
எதையோ விட்டு செல்வதாய் நினைத்து,

அங்கேயே நிலைக்குத்தி நிற்கிறது மனசு!




Friday, February 18, 2011

வெங்காயம்




வெங்காயம் இரத்த விருத்திக்கும் இரத்த சுத்திக்கும் நல்ல வகையில் பயன்பட கூடியதாகும். இரத்த விருத்திக்காக என்று புட்டி புட்டியாக டானிக்குகளை சாப்பிடுவோர் ஒரு நாளைக்கு ஒரு வெங்காயத்தை பட்சையாக சாப்பிட்டு வந்தால் போதும். மிகவும் குறைந்த செலவிலேயே அது நல்லதொரு இரத்த விருத்தி டானிக்காக பயன்படும்.

தொடர்ந்து புகைக்கும் காரணத்தால் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தால், வெங்காயத்தின் சாறு எடுத்து வேளைக்கு அரை அவுன்ஸ் வீதம் ஒரு நாளைக்கு நான்கு வேளை கொடுத்து வந்தால் நல்ல குணம் தெரியும். மற்றும் இருமல், கப வாந்தி, இரத்த வாந்தி, நாட்பட்ட சளி போன்றவற்றையும் வெங்காயச் சாறு குணமாக்கும்.

வெங்காயச் சாற்றுடன் கடுகெண்ணை கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுகளில் வலி தோன்றும் போது உபயோகிக்கலாம். நல்ல குணம் தெரியும். திடீரென்று மயக்கமடைந்து விழுந்து விட்டவர்களின் மூக்கில் இரண்டொரு துளி வெங்காயச் சாறு விட மயக்கம் தெளிந்து உட்காருவார்கள்.

அரைக்கீரை

 

சிறுநீர் இறங்குவதில் சிரமம் இருந்தால், அரைக்கீரை நிவர்த்தி செய்யும். இந்த கீரையை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, பித்தம் தொடர்பான எல்லாப் பிணிகளும் விலகி, நல்ல குணம் தெரியும்.

இஞ்சி


வாய்வையும் கபத்தையும் கண்டிக்கும் ஆற்றல் பெற்றது. தொண்டைப் புண், குரல் கம்மல், பித்தம், மயக்கம், நீரிழிவு, வயிற்றுப் பொருமல், வயிற்று வலி போன்ற பிணிகளுக்கு, இஞ்சிச் சாறு மிகவும் நல்ல மருந்து.

பொதுவாக இஞ்சியைக் கசாயம் செய்து சாப்பிடலாம், உணவோடு அன்றாடம் சேர்த்து கொள்வது உத்தமம். அதிகாலை நேரத்தில் இஞ்சிச் சாறுடன் சர்க்கரைச் சேர்த்து சாப்பிட பித்த மயக்கம், கிறுகிறுப்பு அகலும். இஞ்சிச் சாறும் தேனும் கூட்டி அதிகாலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதய நோய்கள் அகலும், இதயம் வலிமை பெறும்.


Thursday, February 17, 2011

ஞானச்சுடர்


நாம் விரும்பியோ, விரும்பாமலோ, இந்த பூமியில் பிறப்பெடுத்து விட்டோம். யாராக இருந்தாலும் என்றாவது ஒரு நாள், இந்த உலகை விட்டு போய்தான் தீர வேண்டும். அதுவரை இந்த பிறவியால் எவ்வளவோ அழுக்கை நம் மனதில் எற்றுக் கொண்டு விடுகிறோம்.

மனம், வாக்கு, உடம்பு, ஆகிய வற்றால் எவ்வளவோ பாவங்களை செய்து விட்டோம். அதே உடலைக் கொண்டுதான், பாவங்களுக்குப் பிராயச்சித்தமும் தேட வேண்டும்.

சாஸ்திர நூல்கள், திருத்தலங்கள், தீர்த்தவாதிகள் முதலிய நல்ல விஷயங்களில் நம் மனம் ஈடுபட வேண்டும். நிறைய புண்ணிய காரியங்களைச் செய்து, பாவங்களைக் கரைத்துவிட வேண்டும்.

நம் மனதில் எப்போது ஒழுக்கமும் தூய்மையும் கட்டுப்பாடும் உண்டாகிறதோ, அப்போதுதான் உண்மையான பக்தியும் ஞானமும் உண்டாகும். அதுவரை நாம் செய்யும் பூஜை, வழிப்பாடு எல்லாம் இரண்டாம் பட்சம்தான்!

வளரும் பயிர்களுக்கு வேலிபோட்டால்தான், ஆடு, மாடு போன்ற உயிரினங்களினால் பாதிக்கப்படாமல் வளர்ந்து நிற்கும். அதுபோல நாம் சம்பாதிக்கும் பணத்திற்கு வேலி இருக்கிறது, அதுதான் தான தர்மம். இதை செய்யும் போதுதான் பாவங்கள் நீங்கும்.

சந்தனம் என்பது குளிர்ச்சியையும் வாசனையையும் தருவதைப் போல சத்தியத்தை அறிவதற்காகக் கொடுக்கப்பட்ட உடல் இது. அதை அற்பச் செயல்களுக்குப் பயன் படுத்தக் கூடாது.


அபிராமி அந்தாதி

அகால மரணத்தைத் தவிர்க்க

ஆளுகைக்(கு) உன்றன் அடித்தா
மரைகள் உண்(டு). அந்தகன்பால்
மீளுகைக்(கு) உன்றன் விழியின்
கிடையுண்டு; மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை; நிங்குறை
யே அன்று; முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்தவில்
லான்பங்கில் வாணுதலே - 0039




















 
அபிராமி! நின் திருவடித் தாமரைகள் இருக்கின்றன. அவற்றிற்கு என்னை ஆளும் அருள் உண்டு. உன்னுடைய கடைக்கண் கருணை உண்டு. ஆகையால் எமனிடத்திலிருந்து எனக்கு மீட்சியுண்டு. நான் உன்னை முயன்று வணங்கினால் பயன் உண்டு. வணங்காவிடின் அது என் குறையே, உன் குறையன்று. அழகிய நெற்றியை உடையவளே! முப்புரத்தை அழிக்க வில்லையும் அம்பையும் எடுத்த சிவபெருமானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! அபிராமியே!